Monday, August 27, 2012

ஒரு அர்த்த ராத்திரி வேளையில்...

ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த
அர்த்த ராத்திரி வேளையில், நான் மட்டும்
பேய் முழி முழித்துக் கொண்டிருக்கிறேன்...

உன்னுடன் இருக்கும் போது இன்னும் சற்று நேரத்தில்
இரயிலை பிடிக்கச் செல்லும் பயணி போல்,
இறக்கை கட்டி பறக்கும் நேரம்
இப்போதோ,
பள்ளி செல்ல மனம் இல்லாமல்
தாயை கட்டிக் கொண்டு அழும்
சிறு மழலையை போல்,
இங்கேயே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு விட்டது...!

No comments:

Post a Comment