உன்னில் இருந்து உருவான ஒரு உயிர் வீட்டிலும்
என்னில் இருந்து உருவான ஒரு உயிர் கருவிலும் இருக்க
நீயும் நானும் நாமாகவே இருப்பதை
தன் ஒரு சொல்லில் அடக்க முயன்று
தோற்றுத் தான் போகிறது நட்பு..
-------------------------------------------------------------------
நம் நட்பிற்கு சாட்சியாய் இருப்பது
ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பு மட்டும் அல்ல..
உன் சுகத்தில் என் கண்கள்
என்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி நீரும்..
என் சோகத்தில் உன் நெஞ்சம்
உன்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி குருதியும் தான்..
-------------------------------------------------------------------
பத்து மாதம் உன் பிள்ளையை சுமந்தது
உனக்கு ஆனந்தம் என்றால்
உன்னை பாத்து ஆண்டுகளுக்கும் மேலாக
நான் சுமந்து கொண்டிருக்கிறேனே
அதற்க்கு என்ன சொல்கிறாய்..??
-------------------------------------------------------------------
எல்லாருக்கும் மாதம் ஒரு முறை தான்
பௌர்ணமி வருகிறது..
எனக்கோ வருடம் ஒன்றிரண்டு முறை
உனை காணும் நாட்களே பௌர்ணமி..
-------------------------------------------------------------------
தூக்கத்தில் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேனாம்..
கனவில் நீ வரும் போது நான் வேறு என்ன செய்ய..??
-------------------------------------------------------------------
உன் வீட்டில் திருஷ்டிக்காக பிள்ளையார் வை..
முருகனை வைத்தால், வள்ளி தெய்வானையோடு
உன்னையும் அழைத்துப் போய் விடுவார்..
-------------------------------------------------------------------
நாட்கள் கடந்து போகும் போது அதிகரிப்பது
என் வயது மட்டும் அல்ல ,
உனக்கான என் காதலும் தான்..
-------------------------------------------------------------------
உன்னை பார்த்து விட்டு வீடு திரும்பும் நாட்களில் எல்லாம்
நான் பொம்மையை தொலைத்த குழந்தையாகவே இருக்கிறேன்..
என்னில் இருந்து உருவான ஒரு உயிர் கருவிலும் இருக்க
நீயும் நானும் நாமாகவே இருப்பதை
தன் ஒரு சொல்லில் அடக்க முயன்று
தோற்றுத் தான் போகிறது நட்பு..
-------------------------------------------------------------------
நம் நட்பிற்கு சாட்சியாய் இருப்பது
ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பு மட்டும் அல்ல..
உன் சுகத்தில் என் கண்கள்
என்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி நீரும்..
என் சோகத்தில் உன் நெஞ்சம்
உன்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி குருதியும் தான்..
-------------------------------------------------------------------
பத்து மாதம் உன் பிள்ளையை சுமந்தது
உனக்கு ஆனந்தம் என்றால்
உன்னை பாத்து ஆண்டுகளுக்கும் மேலாக
நான் சுமந்து கொண்டிருக்கிறேனே
அதற்க்கு என்ன சொல்கிறாய்..??
-------------------------------------------------------------------
எல்லாருக்கும் மாதம் ஒரு முறை தான்
பௌர்ணமி வருகிறது..
எனக்கோ வருடம் ஒன்றிரண்டு முறை
உனை காணும் நாட்களே பௌர்ணமி..
-------------------------------------------------------------------
தூக்கத்தில் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேனாம்..
கனவில் நீ வரும் போது நான் வேறு என்ன செய்ய..??
-------------------------------------------------------------------
உன் வீட்டில் திருஷ்டிக்காக பிள்ளையார் வை..
முருகனை வைத்தால், வள்ளி தெய்வானையோடு
உன்னையும் அழைத்துப் போய் விடுவார்..
-------------------------------------------------------------------
நாட்கள் கடந்து போகும் போது அதிகரிப்பது
என் வயது மட்டும் அல்ல ,
உனக்கான என் காதலும் தான்..
-------------------------------------------------------------------
உன்னை பார்த்து விட்டு வீடு திரும்பும் நாட்களில் எல்லாம்
நான் பொம்மையை தொலைத்த குழந்தையாகவே இருக்கிறேன்..