Monday, July 17, 2017

என் கவிதையே... (பகுதி - 19)

உன்னில் இருந்து உருவான ஒரு உயிர் வீட்டிலும்
என்னில் இருந்து உருவான ஒரு உயிர் கருவிலும் இருக்க
நீயும் நானும் நாமாகவே இருப்பதை
தன் ஒரு சொல்லில் அடக்க முயன்று
தோற்றுத் தான் போகிறது நட்பு..

-------------------------------------------------------------------
நம் நட்பிற்கு சாட்சியாய் இருப்பது
ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பு மட்டும் அல்ல..
உன் சுகத்தில் என் கண்கள்
என்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி நீரும்..
என் சோகத்தில் உன் நெஞ்சம்
உன்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி குருதியும் தான்..


-------------------------------------------------------------------
பத்து மாதம் உன் பிள்ளையை சுமந்தது 

உனக்கு ஆனந்தம் என்றால்
உன்னை பாத்து ஆண்டுகளுக்கும் மேலாக 

நான் சுமந்து கொண்டிருக்கிறேனே
அதற்க்கு என்ன சொல்கிறாய்..??


-------------------------------------------------------------------
எல்லாருக்கும் மாதம் ஒரு முறை தான்
பௌர்ணமி வருகிறது..
எனக்கோ வருடம் ஒன்றிரண்டு முறை
உனை காணும் நாட்களே பௌர்ணமி..


-------------------------------------------------------------------
தூக்கத்தில் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேனாம்..
கனவில் நீ வரும் போது நான் வேறு என்ன செய்ய..??


-------------------------------------------------------------------
உன் வீட்டில் திருஷ்டி
க்காக பிள்ளையார் வை..
முருகனை வைத்தால், வள்ளி தெய்வானையோடு
உன்னையும் அழைத்து
ப் போய் விடுவார்..

-------------------------------------------------------------------
நாட்கள் கடந்து போகும் போது அதிகரிப்பது
என் வயது மட்டும் அல்ல ,
உனக்கான என் காதலும் தான்..


-------------------------------------------------------------------
உன்னை பார்த்து விட்டு வீடு திரும்பும் நாட்களில் எல்லாம்
நான் பொம்மையை தொலைத்த குழந்தையாகவே இருக்கிறேன்..

என் கவிதையே... (ஒரு இடைவெளிக்கு பிறகு)

மூன்று ஆண்டுகள்..
மூன்று ஆண்டுகள் ஆகிறது,
நான் நம் வலைப் பதிவிற்கு வந்து..

வேலை சுமை அதிகம்..
வீடு.. பணி.. என்று சமாளிக்க முடியவில்லை..
நேரமே கிடைக்கவில்லை.. 
இதெல்லாம் தான் காரணம் என்று நான் கூற மாட்டேன்..
அது உண்மை இல்லை என்று
எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்..

இந்த இடைப்பட்ட நாட்களில் நீ பல முறை கூறியும் 
நான் நானாக இல்லாத காரணத்தைத் தவிர  
வேறு எதுவும் கூற முடியவில்லை எனக்கு..

இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் எழுதுகிறேன்..
நான்எழுதியது எப்படி இருக்கோ தெரியவில்லை..
உன்னை பற்றிய மிதப்பில் இருக்கும் எனக்கு 
எழுதும் முன் வைக்கும் 
பிள்ளை சுழி கூட அழகாகத் தான்  தெரிகிறது...!

என்னவளே , இனிய இருவர் தின வாழ்த்துக்கள்..!!