அம்மி மிதித்து.. அருந்ததி பார்த்து..
சொந்தம் பந்தம் படை சூழ,
மனித மனங்கள் ஆட்சதை தூவ,
நடக்க இருக்கும் நம் திருமணம்-
வெறும் திருமணம் அல்ல, பல நல்ல உள்ளங்கள்
நம்மை மனதார வாழ்த்தும் இனிய தருணம்..!
காதலர்களாக கசிந்து உருகி இருப்பினும்,
அன்று ஏற்படும் இலேசான உரசல்களும் ..
திருட்டுப் பார்வைகளும்.. அடடா...!!
அன்று ஓர் நாள் முழுவதும்
நெஞ்சமும் உடலும் பதைபதைக்க..
கழுத்தில் முடிச்சு விழும் அந்த ஓரிரு தருணங்கள்..
அதற்க்கு பின் நான் உன்னவள்,
முழுமையாக ஓர் அங்குலம் கூட மிச்சம் வைக்காமல்
உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு,
இனி எல்லாம் நீதான் என்று குதூகலிக்கும்
அந்த க்ஷணங்கள்.. அப்பப்பா...
இன்னும் எத்தனை எத்தனை இன்பங்களடி..??
இதுதான் ஆயிரம் காலத்து பயிரடி!