Thursday, November 22, 2012

என் கவிதையே... (பகுதி - 10)

நீ வேலை செய்யும் வங்கியின் கிளை மட்டும் இன்றி,
மற்ற எல்லா கிளைகளை கடக்கும் போதும்
நீ இருக்க மாட்டாய் என்று தெரிந்தும்
உள்ளே எட்டிப் பார்க்கத் தவறியதில்லை..
நீயோ, என்னை பார்க்க வேண்டும் என்று
உனக்குத் தோன்றவில்லையா என்று கேட்கிறாய்..
இதற்கு  நான் என்ன பதில் சொல்ல??

Thursday, November 1, 2012

சந்தோஷத்தின் விலை

லேசான மழையில்,
சல்லடை  கூரையின் கீழ் நின்று,
முகமும் அகமும் குளிர,
பத்து ரூபாய்க்கு காளான் உண்ணும் சந்தோஷத்தை;
நூற்றுக் கணக்கில் கொடுத்தாலும் தருவதில்லை -
செயற்க்கை குளிரூட்டி, அடைத்து வைக்கப்பட்ட
மேல் தட்டு Restaurant களில் கிடைக்கும்
Pizza - க்களும், French Fries - களும்!!