என் தேடல்,
ராமருக்காக காத்திருக்கும் சீதையுடைய தேடல் அல்ல
என்றேனும் வருவார் என்ற நம்பிக்கையில் தவம் இருக்க..!
இவ்வுலகில் யாரும் ராமர் அல்ல..
ராமராக இருக்கவும் முடியாது... இருக்கவும் முயற்சிக்க வேண்டாம்..
வந்தாலும், வராவிடிலும், கண்ணனை நினைத்து நினைத்து,
மனம் உருகி, திசை கலங்கி, உயிர் பெருகி,
ஓர் மாய நிலையில் இருக்கும் மீரா நான்..!!
என்றேனும் ஒரு நாள், என்னை தேடி ஏதேனும் ஒரு கிருஷ்ணன் வரக்கூடும்..
அந்த கிருஷ்ணனுக்காக, அந்த கோபாலனுக்காக,
இந்த மீரா எப்போதும் காத்திருப்பேன்!!
No comments:
Post a Comment