காதல்..
இது படுத்தும் பாடு, சொல்லி மாளாது..
எங்கும் உன் முகம்..
எதிலும் உன் குரல்..
எப்போதும் உன் நினைவுகள்..
தேடிக்கொண்டே இருக்கின்றன என் கண்கள்,
உன் முகத்தை..
கேட்டுக்கொண்டே இருக்கின்றன என் செவிகள்,
உன் குரலை..
ஏங்கிக்கொண்டே இருக்கின்றன என் உணர்வுகள்,
உன் ஸ்பரிசங்களை..
அமைதியான இடத்தில் மட்டுமே
கவிதை எழுதிய என்னை..
இத்துணை பேர் மத்தியில்,
இத்துணை வேலைகளுக்கு நடுவில்,
கவிதை எழுத வைத்த உனக்கு,
அழகாய்.. அழுத்தமாய்.. என் அன்பு முத்தங்கள்..!!!
No comments:
Post a Comment