Monday, July 17, 2017

என் கவிதையே... (ஒரு இடைவெளிக்கு பிறகு)

மூன்று ஆண்டுகள்..
மூன்று ஆண்டுகள் ஆகிறது,
நான் நம் வலைப் பதிவிற்கு வந்து..

வேலை சுமை அதிகம்..
வீடு.. பணி.. என்று சமாளிக்க முடியவில்லை..
நேரமே கிடைக்கவில்லை.. 
இதெல்லாம் தான் காரணம் என்று நான் கூற மாட்டேன்..
அது உண்மை இல்லை என்று
எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்..

இந்த இடைப்பட்ட நாட்களில் நீ பல முறை கூறியும் 
நான் நானாக இல்லாத காரணத்தைத் தவிர  
வேறு எதுவும் கூற முடியவில்லை எனக்கு..

இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் எழுதுகிறேன்..
நான்எழுதியது எப்படி இருக்கோ தெரியவில்லை..
உன்னை பற்றிய மிதப்பில் இருக்கும் எனக்கு 
எழுதும் முன் வைக்கும் 
பிள்ளை சுழி கூட அழகாகத் தான்  தெரிகிறது...!

என்னவளே , இனிய இருவர் தின வாழ்த்துக்கள்..!!

No comments:

Post a Comment