உன்னையும் என்னையும் விட நம் நட்பை அதிகம் சுமந்தது
நம் பேனா தான்…
இன்னும் ஈரம் காயாமல் விரல்களில் ஒட்டிக் கொள்கின்றது
நாட்குரிப்பில் நாம் பரிமாறிய கவிதைகள்…
ஓரிரு வாய் உணவு மீதம் இருக்கையில்
நீ ஊட்ட வேண்டும் என்றே நான் உண்ண மறுக்க,
பகலிலும் உண்டு நிலா என்று,
உன் ஆம்பல் விழிகளில் தொலைந்து
நான் உன் முகம் பார்க்க,
பருக்கை சிந்தாது நீ ஊட்டி விட்ட பொழுதுகள்…
நமக்கு மொழிப் பாடம் எடுத்த நம் மல்லிகா Mam…
அவ்வப்போது அவர் அணியும் புடவை, அணியும் விதம்
பற்றி வியந்து பேசுவது ஒரு புறம் இருக்க;
நாம் ஒரு நொடி கவனம் சிதறாது பாடத்தை மட்டுமே
கவனித்த ஒரே வகுப்பு - அவர் வகுப்பு…
லீனா என்றொரு பட்டாசு,
உன்னை அழைத்துக் சொன்னது..
என்னுடன் சேர வேண்டாம், நான் உன்னையும் கெடுத்து விடுவேனாம்…
இப்படி சொன்னதற்கு என்னை விட அதிகம் வருத்தப் பட்டது நீ..
அவருக்கு எங்கே தெரிய போகிறது???
பள்ளி நட்பை தாண்டி நாம் வெகு தூரம் சென்று விட்டது…
பரிட்சைக்கு முந்தய விடுமுறையில் கூட
உன் நினைவுகள் என்னையும்,
என் நினைவுகள் உன்னையும் கிழிக்க,
பள்ளியின் முதல் மாடியில்,
காற்றும் சிலந்தியும் மட்டுமே சொந்தம் கொண்டாடும்
வகுப்பறையில், மேஜை நாற்காலியின் வாசத்தில்,
நீயும் நானும் தனிமையில்
படித்து, உறங்கி, உண்டு, பேசி, பகிர்ந்து, மகிழ்ந்து,
அமுத சுரபியை போல்
அள்ள அள்ள குறையாத,
சொல்ல சொல்ல தெரியாத / தீராத
இன்பங்களில் திளைத்து, வளர்ந்தோம்..
நாம் நட்பை வளர்த்தோம்..
தமிழே, உனக்கு செம்மொழி அந்தஸ்தை கொடுத்தது யார்??
இன்னும் இன்னும் எங்கள் உணர்வுகளை மொத்தம்
வெளிக் கொணரும் ஒரு வார்த்தை உன் மொழியில் இல்லையே..
தமிழ் மொழியில் இல்லை…
தமிழே, உனக்கு செம்மொழி அந்தஸ்தை கொடுத்தது யார்????
No comments:
Post a Comment