என் உயிர் தோழியே..
நமக்கான நட்பு ஆத்மார்த்தமான..
தெய்வீகமான நட்பல்ல..
ஏதார்த்தமான, புரிதலான நட்பு..!
உன் வீட்டில் என்னை உன்னைப் போலவும்,
என் வீட்டில் உன்னை என்னைப் போலவும்
ஏற்றுக்கொண்டு கொண்டாடுவது மகிழ்ச்சி எனில்...
உன்னவர் என்னையும்,
என்னவர் உன்னையும்,
நம்மவர் நம் நட்பையும்
கொண்டாடுவது நெகிழ்ச்சி...
நம் நட்பின் சாட்சி நாம்
கடந்து வந்த இந்த 7 வருடங்களல்ல...
நாம் வாழப் போகும் அடுத்த 50 வருடங்கள்...
என்னைத் தாண்டி, உன்னைத் தாண்டி,
நம் குடும்பம், உறவுகளை தாண்டி
நம் நட்பு தொடரவேண்டும்..
தொடரும்....!!!
No comments:
Post a Comment