Monday, August 27, 2012

என் கவிதையே... (பகுதி - 7)

உன்னை பற்றி எண்ணுகையில் என் மனதிற்கு தான்
என்ன குதூகலமோ..
அந்த நிமிடம் என் மனதிற்குள் யாரேனும் பிரவேசித்தால்,
சுனாமியை விட வீரியம் மிகுந்த என் மன அலைகளுக்குள்
தடம் தெரியாமல் தொலைந்து போவர்..

ஆனால் இந்த பாழாய் போன நெஞ்சுக்கூட்டிற்கு
ஏன் தெரியவில்ல??
அதனுள் என் மனம் இல்லை என்று...

அதை தான் என்றோ உனக்கு ஆயிரம் ஜென்மங்களுக்கு,
கோடி கூடை காதலை வாங்கி,
குத்தகைக்குக் கொடுத்துவிட்டேனே..!!

ஒரு வேளை வெறுமையின் காரணமாய் என்
நெஞ்சுக் கூடு லபோ திபோ என்று
கத்தி கூச்சல் இடும் ஓசை
வெற்றிடத்தில் எதிரொலியாய் மாறி
லப் டப் என்று எனக்குக் கேட்கின்றதோ???

No comments:

Post a Comment