Tuesday, August 14, 2012

மீள முடியவில்லை

மீள முடியாமல் தவிக்கிறேன்..
இதயத்தில் இருந்து பாய்ந்து செல்லும்
குருதி, தன்னுடன் என் ரனங்களையும்
சேர்த்துக் கொண்டு பாய்கிறது..
என் உறுதியை மெல்ல மெல்ல
நிலை குலையச் செய்கிறது..
ஆம்.. நான் மெல்ல மெல்ல
இதயம் சொருகி..
வீழ்ந்து கொண்டிருக்கிறேன்..
உணர்வுகள் எல்லாம் செயல் இழந்து
வெறும் சதைக் குவியலாக நான் மாறும் முன்,
ஒரு முறை, ஒரே ஒரு முறை..
நான் கண்ட கனவு.. நினைத்த பொழுது..
அது ஒரு க்ஷணமே ஆனாலும்,
அனுபவித்து, நிற்க...
வாழ்ந்து.. பின் எந்தன்
அன்னை மடியில் வீழ வேண்டும்...!

No comments:

Post a Comment