Tuesday, August 14, 2012

என் அன்புச் செல்வம்

உன் கண்களிடம் தோற்றது, மின்னலின் கீற்று..
உன் இமைகளிடம் தோற்றது, பறவையின் இறகு..
உன் கன்னங்களிடம் தோற்றது, நிலவின் குழைவு..
உன் உதடுகளிடம் தோற்றது, தேனின் சுவை..
உன் விரல்களிடம் தோற்றது, மயிலின் தோகை..
உன் பாதங்களிடம் தோற்றது, தாமரையின் வண்ணம்..
உன் ஸ்பரிசங்களிடம் தோற்றது, பட்டின் கர்வம்..
என் குழந்தை பருவத்தை மீட்டு தந்த பிள்ளை தங்கம் நீ..
என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்த அன்புச் செல்வம் நீ..
உன் மொட்டுக் கன்னத்தில்,
உன்னை பெறாத தாயின் பட்டு முத்தங்கள்...!!

No comments:

Post a Comment