Monday, August 27, 2012

என் கவிதையே... (சிதறல்கள்)

ஒரு நாளில் எத்துனை நிமிடங்களடி கண்ணம்மா??
உன்னுடன் இருந்த நாட்கள், நொடிகளாக பரந்தது போய்,
இன்று நீ இல்லா நொடிகள் கூட நாட்களாய் நீள்வது ஏனோ??
அறிவியல் விந்தையா? அல்லது பிழையா??
ஒரு நாளில் எத்துனை நிமிடங்களடி என் கண்ணம்மா???

-------------------------------------------------------------------

செல்ல பிசாசே...
உன்னை ரசித்துக் கொண்டே இருத்தல் என்ன சுகம்?

அரசு பேருந்து காலியாக வந்தும்
ஓரிரு அடி தள்ளி நின்றதில்
போக சலித்துக் கொண்டு,
ஐந்தாறு ரூபாய் கொடுத்தேனும்
காலடியில் நிற்க்கும் விரைவு பேருந்தில் செல்கிறாய்..

உன்னை ரசிக்கவா?? உன் மழலை சோம்பலை ரசிக்கவா??

No comments:

Post a Comment