முன் ஜென்மம் பின் ஜென்மம்,
இவைகளில் நம்பிக்கை கொண்டவள் அல்ல நான்..
இந்த ஒரு ஜென்மம் கொடுத்ததற்காக,
இறைவனுக்கு முழுமையாக நன்றி கூறுபவள்..
என் மேல் எனக்கு இருக்கும் காதல் என்பது,
என் அன்னைக்கு என் மேல் இருக்கும் அன்பிற்கு இணையானது..
ஆம்.. நான் என்னை காதலிக்கிறேன்..
என்னை மட்டும் அல்ல,
என் விருப்பங்கள், என் வெறுப்புகள்,
என் செயல்கள், என் சறுக்கல்கள்,
என் உரிமைகள், என் சிறுமைகள்,
என் மொத்தத்தையும் காதலிக்கிறேன்..
அழகாக.. அமைதியாக... ஆழமாக...
என்னை நானே எண்ணி பார்க்கிறேன்..
போவதற்க்கு வெகு தூரம் இருக்கின்றது..
பார்ப்பதற்கு பலதும் இருக்கின்றது..
செய்வதற்க்கு கொட்டிக் கிடக்கின்றது..
செய்.. என் காதலே..
செய், அல்லது செத்து மடி - காந்தி அடிகள் சொன்னது..
நான் காந்தியவாதி அல்லவே..
சாவிற்குமுன் ஒரு முறையாவது செய்..
இது எனக்கு நானே சொல்வது..!
என்னை அறியாதவர்க்கு நான் திமிர் பிடித்தவள்..
என்னை அறிந்தவர்க்கு நான் பிடிவாதக்காரி..
திமிர.. பிடிவாதமோ.. இல்லை வேறொன்றோ..
செய்வேன்.. செய்த பின் செத்து மடிவேன்...
நிம்மதியாக.. நிறைவாக…!!!
No comments:
Post a Comment