Monday, August 27, 2012

என் கவிதையே... (தொடர்ச்சி)

நீ அழகியல் காந்தம்..
போகுமிடம் எல்லாம் அழகை
ஈர்த்துக் கொள்கிறாயே...
----------------------------------------------------------------

எனக்கு இமைககளே தேவை இல்லை..
கண் மூடினாலும் நீதானே தெரிகிறாய்...!!
----------------------------------------------------------------

கலியுகத்து குந்தி தேவி நான்..
உன்னை கண்ட நொடி முதல்
உன்னை சுமக்க ஆரம்பித்துவிட்டேனே..!!
----------------------------------------------------------------

என் அம்மா எப்போதும் சொல்வதுண்டு,
பிறந்த முதல் ஆறு மாதங்கள் நான்
அழுதுகொண்டே இருந்தேனாம்...
நீ இல்லாத இந்த உலகில்
வேறு என்ன தான் நான் செய்ய??
----------------------------------------------------------------

வாங்கவும் இல்லை
கொடுக்கவும் இல்லை..
பின் எப்படி இடம் மாறியது - நம் இதயங்கள்??
----------------------------------------------------------------

ஒரு நொடிக்கான இறப்பு எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே போகிறதாம்..
நான் தான் நீ ஒவ்வொரு முறை இமை
மூடும்போதும் செத்துப் பிழைக்கிறேனே..!
----------------------------------------------------------------

முதன்முதலில் உன்னை அன்று
பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறாய்
என்று நான் கூற மாட்டேன்..
நீதான் நாளுக்கு நாள்
அழகாகிக் கொண்டே இருக்கிறாயே..!

No comments:

Post a Comment