பள்ளியில் பகல் முழுவதும் சுற்றித் திரிந்து
கல்லூரியிலும் கரங்கள் ஒன்றாய் கூட
கனவுகள் கண்டோம்…
ஏய் திருட்டுக் கண்ணனே, என்ன உன் திருவிளையாடலா?
இல்லை எங்களை பரிட்சித்து பார்க்க வேண்டி எண்ணமா?
வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்து
அரிதாய் தொடர்பு கொண்டு
அரிதினும் அரிதாய் நேரில் கண்டு
தூரம் அளந்தோம்…
சீதைக்கு மட்டும் தான் சூட்சமம் தெரியுமா?
நாங்களும் அறிவோம்..
சேர்ந்து இருப்பினும் பிரிந்திருப்பினும்
இம்மியளவும் குறையாமல் உறவு வளர்த்தோம்..
என்ன கண்ணா, உன் திருவிளையாடல் தகர்ந்ததா??
குசேலநிடத்து நீ கொண்ட பாசம்,
அர்ஜுனனிடத்தில் நீ கொண்ட உரிமை,
ராதையினிடத்தில் நீ கொண்ட காதல்,
எல்லாம் சேர்ந்ததடா எங்கள் நட்பு!!
அதை நீ அல்ல,
முப்பத்தி முக்கோடி தேவர்கள்..
ஏன் நாங்கள் நினைத்தாலும்
தகர்க்க முடியாது…
காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்செனில்..
நாங்கள் மட்டும் சாமாணியமா???
No comments:
Post a Comment