என் காதலன் கண் முன்னே என் மடியில் வந்து படுக்கிறாய்...
நான் கொஞ்ச வேண்டும் என்றே பற்பல சேஷ்டைகளை செய்கிறாய்...
இரவு நான் வீடு திரும்பும் வரை எனக்காக காத்திருக்கிறாய்...
என் அனுமதி இல்லாமல் உணவை கூட உண்ண மறுக்கிறாய்...
இத்தனை காதல் இருந்தும் ஏனடா என்னை விட்டுப் பிரிந்தாய்?
வீடெங்கும் உன் குரல் கேட்குதடா...
என் உடை எல்லாம் உன் வாசம் வீசுதடா...
நீ இன்றி இனி நம் வீட்டில் நான் எப்படி இருப்பேன்??
இனிமேல் இப்படி ஒரு உறவே வேண்டாம் என்று
நான் எண்னுமளவு என்னுள்
உனக்கான இடத்தை புதைத்த உன்னை,
என் கைகளாலேயே புதைக்க வைத்தாயே
என் ரியோ குட்டி...
என்றும் என்றென்றும் உன் குறும்பின்,
உன் சுட்டித்தனத்தின், உன் அழகின்
அடிமையாக்கி போனாயே,
என் செல்ல குட்டி....!!
No comments:
Post a Comment