Friday, August 17, 2012

என் கவிதையே... (தொடர்ச்சி)

எல்லா எடை இயந்திரங்களும் உன் எடையை
கூட்டிக் காட்டுவதாய் சிணுங்குகிறாய்..
என் இதயமும் உன்னுள் இருப்பதை அறியாமல்...!!
----------------------------------------------------------------

பெண் என்றதில் மிகவும் கர்வம்
கொண்டிருந்த நான், இன்று
முதன் முதலாய் வருத்தப்படுகிறேன்..
ஆணாய் பிறந்திருந்தால் உன்னை
என்றோ என்னவள் ஆக்கிக் கொண்டிருப்பேன் - அதனால்..!!
----------------------------------------------------------------

அலை அலையாய் அலைந்து என்
மனதை அலைப்பாய வைக்கும் உன்
கருங்கூந்தலை ஏனடி அள்ளி முடிகிறாய்?
நான் சந்தோஷமாய் இருப்பதை காண்பதில்
உனக்கு அப்படி என்ன கஷ்டம்?
----------------------------------------------------------------

என்னை நம்புங்கள்..
நான் கவிஞன் அல்ல..
நான் கவிதை எங்கே எழுதினேன்??
அவளை அல்லவா எழுதிக் கொண்டிருக்கிறேன்???!!!
----------------------------------------------------------------

எல்லா கவிஞர்களுக்கும் மிகவும் பிடித்த
தலைப்பு "நிலா" என்ற போது,
எனக்கு மட்டும் எப்படி
அது "நீ" ஆனாய்??
----------------------------------------------------------------

அழுத்தக்காரி..
என்று என் மனதிற்க்குள் புகுந்தாய்
என்பதை தயவு செய்து சொல்லிவிடு,
நான் என் பெண்மையை தொலைத்தது அன்றுதான்...!
----------------------------------------------------------------

பள்ளியில் இருந்து வீடு திரும்பும்
ஒவ்வொருவரும் பையில் புத்தகங்களை
சுமந்து செல்ல, நான் மட்டும்
உன் வாசனையை சுமந்து செல்கிறேன்...!
---------------------------------------------------------------- 

நீ பேசுவது கொள்ளை அழகென்றால்,
உன் மௌனத்தை என்னவென்று சொல்வது??
---------------------------------------------------------------- 

இரு வரி கவிதை எழுதத் தெரியாதா
என்று என்னை கேட்கின்றனர்..
இரு வரி அல்ல, ஒற்றை வார்த்தையில்
எழுதத் தெரிந்தும் எழுதாமல் இருக்கிறேன் -
உன் பெயரை யாரும் திருடாமல் இருக்க
வேண்டும் என்று...!

---------------------------------------------------------------- 

நீ காதலன் நான் காதலியா??
நான் காதலன் நீ காதலியா???
காதலன் காதலி தொலைந்து
காதலை காதலாகி கொண்டாடுவோம் வா....
----------------------------------------------------------------

கர்வத்தை கர்வம் கொள்ள வைத்த அழகு,
உன் அழகு...!
----------------------------------------------------------------

வசியக்காரி...
என்னை வசியப்படுத்தி என் நினைவுகளை
முழுங்குகிறாய்...
தொலைபேசியை துண்டித்தபிறகு தானே
உன்னிடம் என்ன பேசவேண்டும் என்பது ஞாபகம் வருகிறது....!

No comments:

Post a Comment