பிடிக்குதடி உன்னை..
உன் முகம், உன் குரல்,
உன் கண்கள், உன் உதடுகள்,
உன் கூந்தல், உன் பின்னல்,
உன் எல்லாம் எல்லாம்
எல்லாவற்றுக்கும் மேலாக
நீ நீயாக இருப்பது பிடிக்குதடி..
உன்னை கண்டு, ரசித்து,
நாட்கள் களிப்பினும்,
உன்னிடம் நட்பு கொள்ள,
உன்னோடு பேசி மகிழ,
கனவு கண்டு கண்டு
முகூர்த்தம் நோக்கி
காத்திருந்தேன்..
காதலில் மட்டும் தான் தயக்கம் உண்டா??
நட்பிலும் உண்டே..
இல்லை??
நான் உன்மேல் கொண்டது
நட்டிபின்றி காதலா??
நாட்போ, காதலோ..
நினைவுகளை புரட்டிப் பார்க்கையில்...
உனக்கான என் நட்பை எனக்கு முதன் முதலில்
உணர்த்தியது நாம் சென்ற
Personality Development கூட்டம் தான்…
உன்னுடன் இருந்த அந்த சில நாட்கள்,
என்னை நானே என் கண் கொண்டு பார்த்தேன்…
ரசித்தேன் உன்னை அன்று….
அப்போது என் மனம் திறக்க தடையாய் இருந்தது
என்ன என்று எவ்வளவு யோசித்தாலும்
நினைவிற்க்கு வரவில்லை..
ஒன்றுமே இல்லாதது தான் காரணமா?
என்றும் இதுவரை தெரியவில்லை..??!!
No comments:
Post a Comment