அந்த 30 நிமிடங்கள்..
30 நிமிடங்களில் எத்தனை சுகம் தந்தாய் கண்ணே..
மிகக் சரியாக 2 வாரங்களாய் காத்திருந்த நொடிகள்..
நம்மை தெரிந்தோர், தெரியதோர்,
அறிந்தோர், அறியாதோர்,
மற்றார், சுற்றார்,
அத்தனை பேரும் வியந்து,
அதிசயித்து, பொறாமையில் நின்ற தருணங்கள்..
இதயம் கனக்க,
கண்கள் பனிக்க உன்னை கட்டி அணைத்து,
முத்தமிட்ட தருணங்கள்..
நிற்கின்றதடி..
நெஞ்சில் பசுமையாய்..
உன்னை காணும் வரை,
எத்தனை எத்தனையோ வார்த்தைகள்
ஊற்றெடுத்து இதயத்தில் திரண்டிருக்க,
7 வருடங்களுக்கு பிறகு நம் நாளில்
உன்னை கண்டவுடன் எல்லா அக்ஷரங்களும்
உதடுகளில் இருந்து உருண்டோடி,
மனதிர்க்குள் தஞ்சமடைந்து
பின் மறந்தே போனதடி...
என்னை தேடி வந்த பைங்கிளி...
உன் குறும்பு முகத்தை,
கரு விழிகளை, இமை மூடாமல்
பார்த்துக் கொண்டே இருத்தல் என்ன ஆனந்தம்???
7 வருடங்கள் முன்பு
முதன் முதலில் நாம் பகிர்ந்து கொண்டாடிய
அந்த தினத்தை அந்நாளைப் போலவே இன்றும்
வார்த்தையால் வசமாகா உணர்ச்சியில்
நிறைந்து, திளைத்து,
பாதம் தரை பட்டும்
மேலெழும்பிப் பறக்கிறேன்..
என்னை பற்றி என்ன நினைப்பர் என்பது யோசிக்காது,
பிள்ளை வண்ண ரோஜா போல் முகம் மலர்ந்து,
புன்னகையாலே கழிக்கிறேன் இன்று...!!
superb..........my angel.......
ReplyDelete