Tuesday, July 17, 2012

என் கவிதையே.. (முன்னுரை)

இது கவிதை அல்ல..
என் வாழ்வின் மிகச் சிறந்த
கவிதையை பற்றி என் பார்வையால் ஆன ஒரு பகுதி..

இந்த பகுதியில் தழும்ப தழும்ப நிறைந்திருக்கப் போவது
என் அவள் தான் என்றாலும்,
இந்த எண்ணத்திற்கு  உந்துதலாய்  இருந்தது
என் அலுவலக முன் மாதிரியாகவும்,
சிறந்த தோழியாகவும் இருக்கும் என் தமக்கை..
அவரின் ஒரு படைப்பு தான் என்னை இந்த பகுதி எழுதத்  தூண்டியது..
குளிர்ந்த நிலவுக்கு நன்றி...
இனி துவங்குவோமா?
என் வலைப்பதிவை  அழகாக்கப் போகும்
என்னவளுக்கு..
எங்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான
இந்த நாளில் துவங்குகிறேன்
என் சிறிய பரிசை...
என் செல்ல ராட்சஸி...
என்னை தன் ஓர விழி பார்வையால் தன் புறம் ஈர்த்து,
என் உயிரை தன்  அன்பெனும்  மாய வலையில் வீழ்த்தி,
தன் வசமாக்கிக்  கொண்டவளே..
இந்த பகுதி உனக்கே உனக்காக மட்டும்,
உன்னை பற்றிய என் தோழமையை,
என் காதலை, என்னால் முடிந்த வரை,
தமிழால் முடிந்த வரை..
உயிர் ஓவியம் தர ஆசைப்படுறேன்..
அதுவரை காத்திரு தோழி...

No comments:

Post a Comment