Tuesday, January 15, 2013

என் கவிதையே... (தொடர்ச்சி)

உலகம் உருண்டை என்று எல்லோரும் சொல்வதை
நான் எப்படி நம்புவது?
நீ ஐந்தடி உருவமாய் அல்லவா உள்ளாய்!!
----------------------------------------------------------------
 
புகைப்படம் அனுப்பி உள்ளேன் என்றாய்..
அதில் இருந்து இறங்கி வந்து என்னை ஆசையாய்
கட்டிப் பிடிப்பாய் என்று பார்த்தால்,
நீயோ ஒரு கரடி பொம்மையை
கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாய்!!
----------------------------------------------------------------

நாம் சந்திக்கும் நாட்களில்
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு
வந்து நிற்கும் ஒவ்வொரு பேருந்தாய்
நீ எட்டி எட்டிப் பார்க்கும் அந்த
பார்வைக்காகவே நான்
தாமதமாய் வருகிறேன்..
----------------------------------------------------------------

உன் வீட்டுக் கண்ணாடியின் மேல்
எனக்கு கோபம் கோபமாய் வருகிறது..
என்னை விட அதை பார்த்துத் தானே
நீ அதிகம் சிரிக்கிறாய்..!
----------------------------------------------------------------

விடுமுறையிலும் விடாது நாம்
பள்ளி சென்றோம்..
நீ பாடம் படித்தாய்
நான் உன்னை படித்தேன்!
----------------------------------------------------------------

முழு பூசனிக்கையை சோற்றில்
மறைக்க முடியாமல் போகலாம்..
ஆனால் என்னால் நிச்சயம் உன்னை முழுமையாக
என் மனதில் அடக்க முடியும்!
---------------------------------------------------------------

வெளிநாட்டில் யார் யாருக்கோ
மெழுகு சிலை வைத்துள்ளார்கள்..
நானோ என் மனதில் ஓர்
அழகு சிலை வைத்துள்ளேன்..
----------------------------------------------------------------

தெருவிற்கு தெரு 'அழகு நிலையம்' என்று உள்ளதை
சொல் மாற்றம் செய்ய வேண்டும்..
அது உன் வீட்டை அல்லவா குறிக்கிறது??
----------------------------------------------------------------

வகுப்பில் பேய்க் கதை விவரிதது கொண்டிருந்த
அன்று, நீ பயந்து போனாய்..
அந்த நொடி உனை கண்ட நான் தொலைந்து போனேன்..!

No comments:

Post a Comment