Friday, July 18, 2014

என்னவளின் இருவர் தின வாழ்த்துக்கள்!

அதிகாலை கடிகாரம் உற்சாகம் தந்தது..
கைப்பேசியும் நாட்காட்டியும் வாழ்த்துக்கள் சொன்னது..
சோம்பல் முறித்து தேநீர் அருந்த கண்கள் மூடியது..

இதழ்கள் மலர்ந்து இதயம் நெகிழ்ந்தது,
நம் நாளை நினைத்து..

குளித்து முடித்து ஆடை தேட கைகள் நீண்டது..
நீ தந்த உடை இன்று நான் தான் வருவேன்

என்று என் முன் வந்தது..
அழகாக அணிந்து கண்ணாடியைப் பார்க்கிறேன் -

உன் முகம் தெரிந்தது..!
ஆசையாய் ஆர்வமாய் தொட்டு பார்க்க,

என் மனம் ஏங்கியது..!!
எப்போதும் போல் என் பிம்பம் கண்டு

ஏமாற்றம் அடைந்தது...
கண்களுக்கு தெரிவது கைகளுக்கு எட்டவில்லையே

என்று என் மனம் கலங்கியது..

உடனே துடி துடித்து பதற்றம் கொண்டாய்..
இதோ வந்து விட்டேன் என்று என்னுள் வந்தாய்..
என் ஆடையாய் மாறி என்னை கட்டி அனைத்தாய்..
சுற்றி இருக்கும் காற்றில் கலந்து என்னுள் நிறைந்தாய்..
காதோரம் கீசுக்கிசுது கவிதைகள் படித்தாய்..


மீண்டும் பிறந்தது நமது காதல்.....!!!

ஒன்பது வருட அன்பை ஆஸ்திவாரமாகக் கொண்டு,
பத்தாவது வருடத்திற்குள் அடி எடுத்து வைக்க
கைகள் விரித்து அழகாக அழைக்கிறது..

அள்ளி அனைத்து வரவேற்க நாம்
இரு கரம் சேரட்டும்
நமது இந்த இனிய நாளில்.......!!!



என்னவளே......மீண்டும் நம் இருவர் தின வாழ்த்துக்கள்......!!!!!



~Maaya~

No comments:

Post a Comment