Wednesday, March 19, 2014

என் கவிதையே... (பகுதி - 16)

தொலைந்து போனதை பற்றி நான்
சந்தோஷப்படும் ஒரே பொருள் - என் இதயம்!
-----------------------------------------------
நீ வெளியே போகும் போது மழை வந்தால்
தயவு செய்து குடை பிடித்துக் கொள்..
உனக்கு இந்த பொல்லாத மழையைப் பற்றித்
தெரியாது - அது வருவதே, உன் அழகில்
கொஞ்சமேனும் திருடிப் போகத்தான்!
-----------------------------------------------
உன் சமையலை உண்ட பின் கண்களில்
கண்ணீரோடு உன்னைப் பார்த்தேன்..
உணர்ச்சிவசப் படுகிறாயா என்று கேட்டாய்;
மிளகாய் வசப்பட்டு விட்டேன் என்றேன்..
செல்லமாய் என்னை அடித்து விட்டுப் போனாய்,
நான் மீண்டும் அங்கு காதலில் விழுந்தேன்..
-----------------------------------------------
நீ வெட்கப்பட்டு என்னிடம்
உன் காதலை சொன்ன அந்த நேரம்,
காதல், உன் பின்னால் நாணி நின்றது!
-----------------------------------------------
உன்னை பற்றி நினைத்த உடனே எப்படி
என்னை அழைத்தாய் என்று நீ கேட்கிறாய்..
நீ என்னைப் பற்றி நினைப்பதை,
என்னிடம் இருக்கும் உன் இதயம் தான்
சொன்னது என்று உனக்குத் தெரியாது..!

No comments:

Post a Comment