எத்தனை நேரம் தான் உன்னை
கண்ணே, கண்மணியே என்று
காதலர்கள் எல்லோரும் ஏகமாக
அழைப்பது போல் கொஞ்சுவது...
உன் உண்மையான பெயரையே
உபயோகிக்கலாம் என்றால்,
என்னை தவிர நம் காதலை படிக்கும்
யாரும் உன் பெயரை உச்சரிக்க
என் மனம் ஒப்பவில்லை...
அதனால், இன்று உனக்கு
பெயர் சூட்டு விழா நடத்தி,
உனக்கென்று ஒரு அடையாளம்,
நான் மட்டுமே உருகி உருகி அழைக்க
ஒரு பெயர் வைக்கிறேன் -
சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்பது போல்,
என்னுள் இருந்து என்னை வழிநடத்தும்
ஒரு மாய சக்தியாக இருக்கிறாய்.. அதனாலே
உனக்கு 'மாயா' என்று ஒரு பொருத்தமான
பெயரை வைக்கிறேன்...
பிடித்திருக்கிறதா மாயா??
No comments:
Post a Comment