அன்று என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு படத்தில்,
யாரோ ஒரு கதாநாயகி, கொலையாவது போல்
நடித்ததை பார்த்து, என் தோளில் சாய்ந்து
குலுங்கி குலுங்கி அழுதாய்..
மிகைப்படுத்தினாலும் பரவாயில்லை,
இன்னும் சிறிது நேரம் கூட
அந்த கதாநாயகியை கொன்று கொண்டிரு
என்று அந்த கொடியவனிடம் வேண்டியது
என் மனது...!!
No comments:
Post a Comment